ரயில்வேக்கு அவப்பெயர் ஏற்படுத்தும், திருடர்களை ஒடுக்க தேசிய அளவில் சிறப்பு ரோந்துப் படையை உருவாக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் விடுத்த அறிக்கை:
ரயிலில் திருட்டு தொடர்பாக கடந்த 2008-ஆம் ஆண்டு நாடு முழுவதும் 11,497 புகார்கள் பதிவாகின. அடுத்த 5 ஆண்டுகளில் இது 49 விழுக்காடு அதிகரித்தது. 2013-ஆம் ஆண்டு பதிவான புகார்களின் எண்ணிக்கை 18,037. கடந்த 2017-ஆம் ஆண்டு 29,004 ஆக மேலும் அதிகரித்தது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில் பயணிகளின் உடைமைகள் திருட்டுப் போவது 156 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது.
ரயில்வேக்கு அவப்பெயர் ஏற்படுத்தும், இதுபோன்ற திருடர்களை ஒடுக்க தேசிய அளவில் சிறப்பு ரோந்துப்படை உருவாக்கப்பட வேண்டும் என அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தோனேசியாவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவு

ராணிப்பேட்டையில் சுதந்திர நாள் விழா கோலாகலம்: ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை!

சுதந்திர நாள்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

முந்தைய ஆட்சிகளில் கொண்டுவந்த பயனுள்ள திட்டங்கள் தொடரும்: முதல்வர் விஜய் சுதந்திர நாள் உரை!
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


