மன்னார்குடி மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி அருகே உள்ள மண்ணுக்குமுண்டான் ஊராட்சிக்குள்பட்ட கர்ணாவூர் கிராமத்தில் இதுவரை புயல் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்தும், கர்ணாவூர் பகுதியில் உடனடியாக புயல் நிவாரணம் வழங்கக் கோரியும், மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் சுப்ரியா நிகழ்விடத்துக்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் ஊராட்சிக்குள்பட்ட வடகாடு பகுதியில் 479 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 402 குடும்பத்தினருக்கு மட்டுமே நிவாரணப் பொருள்கள் வந்துள்ளன. மேலும், வங்கி கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தியதில் 15 பேருக்கு விடுப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் கஜா புயலுக்குப் பிறகு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்டித்தும், அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரியும், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வலியுறுத்தியும், கோவிலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி தலைமையில், கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வடகாடு பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர் கணபதி, வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்துக்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்த மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வழித்தடங்களில் சுமார்2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


