மன்னார்குடி மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி அருகே உள்ள மண்ணுக்குமுண்டான் ஊராட்சிக்குள்பட்ட கர்ணாவூர் கிராமத்தில் இதுவரை புயல் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்தும், கர்ணாவூர் பகுதியில் உடனடியாக புயல் நிவாரணம் வழங்கக் கோரியும், மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் சுப்ரியா நிகழ்விடத்துக்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் ஊராட்சிக்குள்பட்ட வடகாடு பகுதியில் 479 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 402 குடும்பத்தினருக்கு மட்டுமே நிவாரணப் பொருள்கள் வந்துள்ளன. மேலும், வங்கி கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தியதில் 15 பேருக்கு விடுப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் கஜா புயலுக்குப் பிறகு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்டித்தும், அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரியும், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வலியுறுத்தியும், கோவிலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி தலைமையில், கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வடகாடு பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர் கணபதி, வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்துக்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்த மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வழித்தடங்களில் சுமார்2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

270 கி.மீ. தொலைவிலான சாலைகளைப் பலப்படுத்தப்படும்: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தமிழகத்தில் ஜூன் 27 முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு
ஆலைகளில் ரசாயன பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும்: தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா

ஒலிம்பியாட்: ‘இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்’
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


