தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் கைது

நீடாமங்கலம் பகுதி பாசன ஆறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:36 pm

DIN

நீடாமங்கலம் பகுதி பாசன ஆறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
நீடாமங்கலம் பகுதியில் காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பாசன ஆற்றில் உரிய அனுமதியின்றி இரண்டு டிராக்டர்கள், ஒரு மினி லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, பழைய நீடாமங்கலம் காங்கேயன்திடலைச் சேர்ந்த வீரமணி (33), வேப்பத்தாங்குடி பாலையன் (35), ஆதனூர் மண்டபத்தைச் சேர்ந்த முருகானந்தம் (36), வாசுதேவமங்கலம் புகழேந்தி (39) ஆகிய 4 பேரை கைது செய்து,  அவர்களிடமிருந்து இரண்டு டிராக்டர்கள், ஒரு மினி லாரியை பறிமுதல் செய்தனர். போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து மணல் திருட்டில் ஈடுபட்ட கொட்டையூர் செல்வம் (50), வெள்ளங்குழி காமராஜ் (35) ஆகியோரை தேடி வருகின்றனர். இதேபோல், அனுமதியின்றி மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.