திருவாரூர் மாவட்டத்தில் 14,223 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர்

திருவாரூர் மாவட்டத்தில் 14,223 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர்.
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் 14,223 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 1) தொடங்கி ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 14,385 மாணவ, மாணவியர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 14,223 பேர் தேர்வெழுதினர். 162 பேர் தேர்வுக்கு வரவில்லை. 50 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 35 மாற்றுத் திறனாளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இவர்களுக்கு தரைதளத்தில் தேர்வு மையங்கள் (தனி அறை) அமைக்கப்பட்டிருந்தன. 
தேர்வுப் பணியில் 50 தலைமை கண்காணிப்பாளர், 2 கூடுதல் தலைமை கண்காணிப்பாளர், 75 அலுவலக பணியாளர் மற்றும் கூடுதல் அலுவலக பணியாளர்கள், 750 தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் 95 நிலையான படைகளும், 12 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு தேர்வுகள் கண்காணிக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com