ரயில் பராமரிப்பு ஊர்திகளை முறையாகப் பயன்படுத்தும் திட்டம்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தல்

ரயில் பராமரிப்பு ஊர்திகளை முறையாகப் பயன்படுத்தும் திட்டத்தை வகுக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப்பொதுச் செயலாளர் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.
Updated on
1 min read

ரயில் பராமரிப்பு ஊர்திகளை முறையாகப் பயன்படுத்தும் திட்டத்தை வகுக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப்பொதுச் செயலாளர் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை நீடாமங்கலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ரயில் பாதைகளில் அடிக்கடி விலகும் ஜல்லிக் கற்கள் மற்றும் பிடிமான கிளிப்புகளை சரிசெய்யவும், பழுது, காலாவதியான தண்டவாளங்களை சீரமைக்கவும், வெல்டிங் குறைபாடுகளைக் கண்டறியவும், விலகல் கோணங்களை நேர்செய்யவும் 36 வகையான  பராமரிப்பு இயந்திர ஊர்திகளை ரயில்வே கையாள்கிறது.
மொத்தம் 807 ஊர்திகள் உள்ளன. 1,08,706  கி.மீ., நீள தண்டவாளப் பாதையை பராமரிக்க இவை போதுமானதாக இல்லை. ரயில்வே பராமரிப்பு ஊர்திகள் பாதிநேரமே பயன்படுத்தப்படுகின்றன. எனவே புதிதாக  வாங்குவதற்கு முன் முறையாகப் பயன்படுத்தும் திட்டத்தை வகுக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன், ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்துகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com