திருவாரூரில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகளை திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
திருவாரூர் வடக்கு கோபுர வாசலைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் பிரவீன் (38). மத்திய பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
கோடைவிடுமுறையை முன்னிட்டு, தனது வீட்டு சாவியை அருகில் வசிக்கும் உறவினர் வீட்டில் கொடுத்துவிட்டு, மே 16-ஆம் தேதி பொள்ளாச்சிக்கு
சென்றுள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்ற உறவினர், வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, பிரவீனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் விரைந்து வந்து, பார்த்தபோது, 12 பவுன் நகை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பிரவீன் அளித்த புகாரில், 12 பவுன் நகை திருட்டுப் போயிருப்பதாக தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் எச்5என்1 வைரஸ் தொற்றால் 44 மயில்கள் இறந்தன!

நான் ஒரு பம்பரம் சாம்பியன்: சஞ்சு சாம்சன்

ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த தமிழக வீரர்!

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

