மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

திருவாரூர் அருகே ஆற்றில் குளிக்கும்போது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

Updated On :8 அக்டோபர் 2018, 7:55 am IST

திருவாரூர் அருகே ஆற்றில் குளிக்கும்போது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால்பாளையத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மகன் சபிபுதீன் (19). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரது நண்பரான புலிவலத்தைச் சேர்ந்த ஐயப்பன் மகன் அபினாஷும் (20). அதே கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் தங்களது நண்பர்களோடு திருவாரூர் அருகே பாண்டவையாற்றின் மருவத்தூர் சட்ரெஸ் அருகே குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் சுழலில் இருவரும் சிக்கிக்கொண்டனராம். அவர்களின் சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்த மக்கள், இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால், அபினாஷை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. அவரை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு சபிபுதீன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.