வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சேவையைப் பாராட்டி ஆன்மீக மாமணி விருது

திருவாரூரில் உள்ள ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜெ. கனகராஜனின் ஆன்மிக சேவையைப் பாராட்டி அவருக்கு ஞாயிற்றுக்கிழமை ஆன்மீக மாமணி விருது வழங்கப்பட்டது.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:31 pm

திருவாரூரில் உள்ள ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜெ. கனகராஜனின் ஆன்மிக சேவையைப் பாராட்டி அவருக்கு ஞாயிற்றுக்கிழமை ஆன்மீக மாமணி விருது வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம், குத்தாலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீஆதிசங்கரர் பேரவை சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஸ்ரீ ஆதி சங்கரர் நினைவைப் போற்றும் வகையில் சிறந்த அறிஞர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 
விழாவில், திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவன தலைவர் ஜெ. கனகராஜனுக்கு அவரின் ஆன்மீக சேவையை பாராட்டி, ஆன்மீக மாமணி விருதை திருவாவடுதுறை ஆதினம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் வழங்கியதுடன், சிறந்த அறிஞர்களுக்கு விருது மற்றும் பொற்கிழி வழங்கி ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில், ஆதிசங்கரர் பேரவை அமைப்பின் நிர்வாக இயக்குநர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.