தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

சாலை பழுதுகளை சரிசெய்ய வலியுறுத்தி வாகனங்கள் சிறை பிடிப்பு

திருவாரூர் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்காமல் செல்ல முயன்றதால், சீரமைக்கும் இயந்திரங்களை மறித்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Updated On :24 ஜனவரி 2019, 1:33 am IST

திருவாரூர் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்காமல் செல்ல முயன்றதால், சீரமைக்கும் இயந்திரங்களை மறித்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து, மோசமான நிலையில் உள்ளது. இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே சாலையை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் மற்றும் கிடாரங்கொண்டான் பகுதிகளில் சாலையை சீரமைக்க இயந்திரங்கள், லாரிகள் உள்ளிட்டவை கிடாரங்கொண்டான் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சாலை சீரமைப்பு பணிகளை முடிக்காமல் இந்த வாகனங்களை காரைக்கால் பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டது அப்பகுதி மக்களுக்கு தெரிந்துள்ளது. 
இதையடுத்து, அந்த வாகனங்களை மறித்து சாலை பழுதுகளை சீரமைத்துவிட்டு வாகனங்களை இங்கிருந்து எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இப்பகுதியில் சாலை பழுதுகளை நீக்கிய பிறகே இங்கிருந்து வாகனங்கள் செல்லும் என ஒப்பந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் கலைந்து 
சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.