அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் வங்கி வாடிக்கையாளர் குடும்பத்துக்கு இழப்பீடு

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில்

Updated On :23 ஜனவரி 2019, 5:45 am IST

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. 
மத்திய அரசின் உயிர்க் காப்பீடு திட்டமான, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ், வங்கியில் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களிடம் ஆண்டுதோறும் பிரீமியத் தொகையாக ரூ. 330 பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில், வாடிக்கையாளர் இயற்கை மரணம் அடைந்தால், அவரது வாரிசுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் வீராவாடி கிராமத்தைச் சேர்ந்த என். சோமசுந்தரம் காப்பீடு செய்திருந்தார். இந்நிலையில், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயற்கை மரணம் அடைந்தார்.
இதையடுத்து, அவரது மனைவி உஷா ராணியிடம் இழப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சத்தை வங்கியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கோவை மண்டல இணைப் பொதுச் செயலர் டி.டி. மோகனசுந்தரம், தஞ்சை மண்டல துணைப் பொதுச் செயலர் டி.என். வீரமணி, திருவாரூர் முன்னோடி கிளையின் மேலாளர் எழிலரசன், பூந்தோட்டம் வங்கிக் கிளை மேலாளர் டி. தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.