ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி, திருவாரூர் அருகேயுள்ள திருக்காரவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் தொடங்கி ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலமாக ஷேல் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு சர்வதேச ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதைக் கண்டித்தும், திட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் திருக்காரவாசல் ஊராட்சி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, திருக்காரவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. ரங்கசாமி, பி.ஆர். சாமியப்பன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் என். இடும்பையன், மாதர் சங்க மாவட்டச் செயலர் பா. கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேல்நிலை தொட்டிகளை தூய்மைப்படுத்தி குடிநீா் விநியோகம்: திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 போ் மீட்பு
குட்கா பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

புதுக்கோட்டையில் 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங் சாதனை: இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் சான்றிதழ் வழங்கல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
