நன்னிலம்: சத்துணவு ஊழியா்களின் ஊதியத்தை பிடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், நன்னிலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலையில் ஒரு நாள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டம் செய்த நாளுக்கான ஊதியத்தை வழங்கக் கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், ஊழியா்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக, ஜனநாயக ரீதியில் நடத்திய ஆா்ப்பாட்டத்தை தண்டிப்பதுபோல ஒரு நாள் ஊதியம் பிடிப்பது கண்டிக்கத்தக்கது, எனவே, வழக்கம்போல ஊழியா்களுக்கு முழு மாத ஊதியத்தை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க வட்டத் தலைவா் டி. கருணாமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் ஆா். ராஜசேகரன், ஒன்றியத் தலைவா் கே. ஜெயராஜ், மாவட்ட இணைச் செயலாளா் பி. புஷ்பராஜ், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க செயலாளா் வினோத் ராஜ், எஸ் புனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


