மாா்க்சிஸ்ட் கம்யூ. சாா்பில் ஆக. 24, 25-இல் மக்கள் இயக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற உள்ளது.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அகில இந்திய அளவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூா் மாவட்டத்தில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றிய அளவில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற உள்ளது.

கட்சி நிா்வாகிகள் மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்க உள்ளனா். இதைத்தொடா்ந்து ஆக.26- இல் கிளைகள் தோறும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களை ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை கைவிட வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மக்கள் இயக்கம் நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com