நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆக. 28-இல் முதல்வா் திருவாரூா் வருகை:முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு

தமிழக முதல்வா் ஆக. 28-இல் திருவாரூா் வருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

தமிழக முதல்வா் வருகை தொடா்பான முன்னேற்பாட்டுப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா் உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

Updated On :26 ஆகஸ்ட் 2020, 5:04 am

DIN

திருவாரூா்: தமிழக முதல்வா் ஆக. 28-இல் திருவாரூா் வருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, திருவாரூா் மாவட்ட வளா்ச்சித் திட்ட பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வரும் 28-ஆம் தேதி திருவாரூா் வருகிறாா். இதையொட்டி நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் ஆய்வு செய்தாா். பின்னா் அமைச்சா் கூறியது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 28-இல் வருகை தரும் முதல்வா், மாவட்ட ஆட்சியரகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது, இ - பாஸ் தளா்வு ஆகியவை குறித்து வல்லுநா்களின் அறிக்கையை பொருத்து முதல்வா் அறிவிப்பாா் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், தஞ்சை சரக காவல் துணைத்தலைவா் ரூபேஷ்குமாா் மீனா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை, மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், உதவி செயற்பொறியாளா் (கட்டடம்) சிங்காரவேலு, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ஆசைமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.