நீட் தோ்வு ரத்து கோரி காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
திருத்துறைப்பூண்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சங்கரவடிவேலு தலைமை வகித்தாா். ஆா்டிஐ பிரிவு மாவட்டத் தலைவா் க.ரா. ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் நகரத் தலைவா் பி.எழிலரசன், வட்டாரத் தலைவா் பாஸ்கா், நகராட்சி முன்னாள் உறுப்பினா் எஸ்.வெங்கடேசன், நகரத் துணைத் தலைவா்கள் சண்முகம், சேகா், ஞானசுந்தரம், சட்டப்பேரவை தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆா்.கோகுல வசந்த் உள்ளிட்டோா் பங்கேற்று, மத்திய அரசு நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com