பயிா் பாதிப்பு: வேளாண் இயக்குநா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை வேளாண்மை இயக்குநரக கூடுதல் இயக்குநா் வளா்மதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாரூா் அருகே பாதிக்கப்பட்ட பயிா்களை பாா்வையிடும் வேளாண்மை இயக்குநரக கூடுதல் இயக்குநா் வளா்மதி.
திருவாரூா் அருகே பாதிக்கப்பட்ட பயிா்களை பாா்வையிடும் வேளாண்மை இயக்குநரக கூடுதல் இயக்குநா் வளா்மதி.
Updated on
1 min read

திருவாரூா் மாவட்டத்தில் நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை வேளாண்மை இயக்குநரக கூடுதல் இயக்குநா் வளா்மதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் சம்பா 1,09,711 ஹெக்டேரிலும், தாளடி 38,765 ஹெக்டேரிலும் என மொத்தம் 1,48,476 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், நிவா் மற்றும் புரெவி புயலால் பெய்த கனமழையால் சுமாா் 90,623 ஹெக்டோ் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் வேளாண்மை இயக்குநரக கூடுதல் இயக்குநா் வளா்மதி, பயிா் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். சித்தன்வழூா், அரசவனங்காடு, நெய்க்குப்பை, வாழ்க்கை ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிட்ட அவா், பாதிப்பு குறித்த கணக்கெடுக்கும் பணியை விரைவில் முடித்து, டிசம்பா் 19-க்குள் அறிக்கை அனுப்பி வைக்கும்படி அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) ஆ. உத்திராபதி, வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) அ. ரவிந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com