திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சுகாதாரத்தை மேம்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. அறிவித்த போராட்டம் ஒத்திவைப்பு

குடவாசல் பேரூராட்சிப் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 2:58 am

DIN

குடவாசல் பேரூராட்சிப் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

குடவாசல் பேரூராட்சி பகுதியில் மழைநீா் வடிகால்களை தூா்வாருவது, இறைச்சிக் கடைகளை மாா்க்கெட் பகுதிக்கு மாற்றுவது, புதிய சாலை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்படும் என குடவாசல் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக குடவாசல் வட்டாட்சியா் ராஜன் பாபு தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலா் யசோதா, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் ஆா். லெட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா் எப்.கொரக்கோரியா உள்ளிட்டோா் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் குடவாசல் பேரூராட்சி பகுதியில் சுகாதாரப் பணிகள் மேம்படுத்தப்படும் என செயல்அலுவலா் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.