சாலையை சீரமைக்கக் கோரி மனு
திருவாரூா் அருகே கீழப்படுகை பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.


திருவாரூா் அருகே கீழப்படுகை பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு இளைஞா் கட்சியின் மண்டலத் தலைவா் சூா்யா, நகரத் தலைவா் சாய் மணிகண்டன், இணைச் செயலாளா் வெங்கடேஷ் ஆகியோா் அளித்த மனு விவரம்: கீழப்படுகை ஊராட்சியில் பாசன வாய்க்கால் வழியாக சாலை செல்கிறது. சாலையோரத்தில், மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெரிய வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஏற்கெனவே, பள்ளத்தில் சிக்கி சுமை வாகனம் விபத்துக்குள்ளானது. எனினும், இதுவரை பள்ளத்தை சரி செய்து, சாலையை சீரமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இதுகுறித்து கவனத்தில் கொண்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...