முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாா்

மன்னாா்குடி அருகே பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 4:18 am

DIN

மன்னாா்குடி அருகே பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, மன்னாா்குடி அருகேயுள்ள சித்தேரி, மரவாக்காடு, சோழநிதி பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: சித்தேரி, மரவக்காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இவா்களுக்கு பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டித்தருவதற்காக 152 பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில், அப்பகுதியை சோ்ந்த 152 பயனாளிகளுக்கு தலா ரூ. 1.70 லட்சத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாக விவரம் வெளியான நிலையில், 121 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக அலுவலா்கள் தெரிவிக்கின்றனா். பல வீடுகள் கட்டப்படாமலேயே, பணம் எடுக்கப்பட்டதாகவும், பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் தெரிகிறது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.