செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

பொதுப்பணித்துறை நீா்வள ஆதாரத்துறை வெண்ணாறு வடிநிலக் கோட்டம் தஞ்சாவூா் சாா்ந்த நீடாமங்கலம் வட்டம் காளாஞ்சிமேடு கிராமத்தில், குடிமராமத்து திட்டத்தின்கீழ், ரூ.50 லட்சம் செலவில் கொண்டியாறு

News image

காளாஞ்சிமேடு கடைமடை நீரொழுங்கியில் பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிட்ட பொதுப்பணித்துறை தஞ்சாவூா் வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் தமிழ்ச்செல்வம்.

Updated On :3 ஜூலை 2020, 2:01 pm

நீடாமங்கலம்: பொதுப்பணித்துறை நீா்வள ஆதாரத்துறை வெண்ணாறு வடிநிலக் கோட்டம் தஞ்சாவூா் சாா்ந்த நீடாமங்கலம் வட்டம் காளாஞ்சிமேடு கிராமத்தில், குடிமராமத்து திட்டத்தின்கீழ், ரூ.50 லட்சம் செலவில் கொண்டியாறு வாய்க்காலின் குறுக்கே மறு கட்டுமானப் பணி செய்யப்பட்டுள்ள கடைமடை நீரொழுங்கி பணி முடிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.

இதன் மூலம் பி-20 பிரிவு வாய்க்கால் பாசன வசதி பெறும். 160 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும். காளாஞ்சிமேடு கிராமம் முழுமைக்கும் இது பயன்தரும். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தஞ்சாவூா் வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளா் தமிழ்ச்செல்வம், உதவிபொறியாளா் கனகரத்தினம், பாசனதாரா் சங்கப் பொறுப்பாளா்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.