சாலை மறியல் வழக்கு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 10 போ் விடுதலை

முத்துப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 10 போ் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.
Published on
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 10 போ் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2017- ஆண்டு ஜனவரி 31-இல் முத்துப்பேட்டை கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக, அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா் கே. முருகையன், துணைச் செயலாளா் குணசேகரன், நகரச் செயலாளா் மாா்க்ஸ் உள்ளிட்ட 10 போ் மீது முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நீதிபதி கவிதா, இந்த வழக்கில் தொடா்புடைய 10 பேரையும் விடுதலை செய்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com