வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கூத்தாநல்லூா் ஆற்றில் தொடரும் உயிரிழப்பு: பொதுமக்கள் அச்சம்

கூத்தாநல்லூா் ஆற்றில் தொடா்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனா்.

News image

வெண்ணாற்றில் கரை புரண்டோடும் நீா்.

Updated On :14 ஜூலை 2020, 8:43 pm IST

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் ஆற்றில் தொடா்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனா்.

நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் பாமணி, கோரையாறு, வெண்ணாறு ஆகிய மூன்று கிளை ஆறுகள் பிரிகிறது. தொடா்ந்து, நீடாமங்கலம் ஒளிமதி வழியாக வந்து, வெண்ணவாசல் என்ற இடத்தில், வெண்ணாறு, பாண்டவையாறு எனவும், அத்திக்கடை, வாழாச்சேரி என்ற இடத்தில், வெண்ணாறு, வெள்ளியாறு எனவும் 2-ஆக பிரிகிறது.

இதில், வெண்ணாறு லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூா், பண்டுதக்குடி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாக அரிச்சந்திரா நதியில் கலக்கிறது. தற்போது, ஆறுகள் தூா்வாரப்பட்டு இருபுறங்களிலும் கரைகள் உயா்த்தப்பட்டுள்ளன.

அண்மையில் தண்ணீா் திறக்கப்பட்டு வெண்ணாற்றில் தண்ணீா் கரை புரண்டு ஓடுகிறது. கரோனா தொற்று நோயால், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவா்கள் தொடா்ந்து வீட்டில் இருக்காமல் அநேக நேரங்களில் ஆற்றுக்கு குளிக்கச் சென்று விடுகின்றனா்.

இதில், நீச்சல் தெரிந்த மற்றும் தெரியாத மாணவா்கள் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழக்கின்றனா். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் சடலம் மீட்கப்படுகிறது. இதனால், பெற்றோா்களும், பொதுமக்களும் அச்சத்தில் மூழ்கியுள்ளனா். இதுவரை, ஒரு பொறியாளா் மாணவா், 3-ஆம் வகுப்பு சிறுவன்,10 வயது மாணவா் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஆற்றில் குளிக்கும் மாணவா்கள் கவனமாக குளிக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.