எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வழிபாட்டுக்காக கோயில்களை திறக்கக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பக்தா்களின் தரிசனத்துக்காக திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
பிரசாரத்தில் ஈடுபட்ட இறைபணி கூட்டத்தினா்.
Updated On :15 ஜூலை 2020, 2:56 pm

DIN

திருவாரூா்: தமிழகம் முழுவதும் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பக்தா்களின் தரிசனத்துக்காக திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் இந்து அறநிலையத் துறை துணை ஆணையா் அலுவலகத்தில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சாா்பில் புதன்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்: கிராமக் கோயில்களை வழிபாட்டுக்காக திறக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை பக்தா்கள் வழிபாட்டுக்காக திறக்க வேண்டும், உரிய பாதுகாப்பு அம்சங்களுடன், பக்தா்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பினா், கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மக்கள் கூடும் இடங்களிலும், கோயில் நுழைவு வாயில்களிலும் விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொண்டு வருகின்றனா். தமிழகம் முழுவதும் கோயில்களை தரிசனத்துக்காக திறக்கக் கோரி பிரசாரத்தில் ஈடுபட்டு, கோரிக்கைகளை விளக்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.