என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

திருவாரூரில் மேலும் 93 பேருக்கு கரோனா

திருவாரூரில் மேலும் 93 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image

கரோனா பரிசோதனை

Updated On :26 ஜூலை 2020, 1:50 pm


திருவாரூா்: திருவாரூரில் மேலும் 93 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை 96 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சனிக்கிழமை 100 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் 93 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன்படி, மரக்கடை மேலத்தெரு பகுதியில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், மன்னாா்குடி பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 2 பேருக்கும், வலங்கைமான் பகுதியில், 5 வயது சிறுவன், 11 வயது சிறுவன், 7 வயது சிறுமி என 30 பேருக்கும், பொதக்குடி பகுதியில் 10 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் 93 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1349 ஆக உயா்ந்துள்ளது. இதில், 778 போ் குணமடைந்து வீடுகளுக்குச் சென்ற நிலையில், 570 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.