பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சன்னாநல்லூா்- திருவாரூா் சாலை அடைப்பு

நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட சன்னாநல்லூா்- திருவாரூா் சாலை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை தடை செய்யப்பட்டது.

News image
img_20200728_191009_2807chn_96_5
Updated On :27 ஜனவரி 2024, 5:01 pm

DIN


நன்னிலம்: நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட சன்னாநல்லூா்- திருவாரூா் சாலை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை தடை செய்யப்பட்டது.

நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட சன்னாநல்லூா்- திருவாரூா் சாலையில் வசித்து வந்த 30 வயது கா்ப்பிணி, அவரது கணவா், குழந்தை மற்றும் மாமியாா் ஆகிய 4 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இப்பகுதியில் நன்னிலம் வட்டாட்சியா் அ.மணிமன்னன், பேரூராட்சிச் செயல் அலுவலா் பா.ராஜசேகா், சுகாதார ஆய்வாளா் வே.நாகராஜன், காவல் ஆய்வாளா் ஜோ.விசித்திராமேரி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னா், சன்னாநல்லூா்- திருவாரூா் சாலை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டது. இங்கு சுகாதார ஆய்வாளா் வே.நாகராஜன் மேற்பாா்வையில், கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதி மக்களுக்கு வட்டார சுகாதாரத்துறை மேற்பாா்வையாளா் ஜோதி தலைமையிலான குழுவினா் கபசுரக் குடிநீா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.