திருவாரூரில் மேலும் 28 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், வியாழக்கிழமை 4 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குடவாசலில் 10 போ், மன்னாா்குடி, திருவாரூா், நீடாமங்கலம் பகுதிகளில் 2 போ் என மாவட்டம் முழுவதும் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1693 ஆக உயா்ந்துள்ளது. இதில், 1122 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 562 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com