ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடி அருகே பாலியல் சீண்டலால் தற்கொலைக்கு முயன்ற சிறுமி

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சார்ந்த சரவணன், வேல்சாமி, குகன் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சேர்ந்து

News image
Updated On :14 மே 2020, 2:59 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சார்ந்த சரவணன், வேல்சாமி, குகன் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சேர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளனர். 

இந்தநிலையில், சிறுமியின் வீட்டில் ஆள்இல்லாத சமயத்தில் அங்கு மதுபோதையில் வந்த சரவணனும் அவனுடைய கூட்டாளிகளும் பாலியலுக்கு உடன்படுமாறும், இல்லையென்றால் குடும்பத்துடன் தீயிட்டு கொளுத்தி விடுவதாகவும் சிறுமியை மிரட்டி சென்றுள்ளனர்.

 இதை வீட்டில் யாரிடமும் கூறாமல் மனவேதனையில் இருந்துவந்த சிறுமி, தன்மானத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக தனக்குத்தானே தீவைத்து தற்கொலை முயற்சி செய்தார். 

அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சிறுமியின் தாய் மற்றும் உறவினர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், சிறுமியை தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து அவளை தற்கொலைக்கு தூண்டியுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றசம்பவத்தில் தொடர்புடையவர்கள் இங்கிருந்து வெளியூருக்கு லாரியில் தப்பிச்சென்று விட்டதாக தகவல் வருகிறது.

எனவே, தலைமறைவானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியும், அவருடைய குடும்பத்தினரும் பாதுகாப்பாக வாழ்வதை உறுதிசெய்ய வேண்டும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.