தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அம்பான் புயல் எதிரொலி: முத்துப்பேட்டை பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

தென் வங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பான் புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள

News image
Updated On :18 மே 2020, 10:14 am

DIN

தென் வங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பான் புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பத்து கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடலோர காவல் குடும்பத்தினரும் மீன்வளத் துறையினரும் எச்சரித்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவான புயல் அதி தீவிரம் அடைந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு 650 கிலோ மீட்டரில் மையம்கொண்டு அது மே 20ம் தேதி மேற்கு வங்கத்திற்கும், வங்கதேசத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதால் கடல் மீன்பிடி தடைக்காலம் உள்ளநிலையில் பைபர் மற்றும் நாட்டுப் படகுகளில் ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என முத்துப்பேட்டை கடலோர காவல் ஆய்வாளர் ராஜசேகரன் மீனவர்களை எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.