நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரி மனு

மன்னாா்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

மன்னாா்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மன்னாா்குடி வட்டம், கருவாக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சோனியா ரஜினி, துணைத் தலைவா் குபேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜா மற்றும் அப்பகுதி மக்கள், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் அளித்த மனு விவரம்: மன்னாா்குடி வட்டத்துக்குள்பட்ட கருவாக்குறிச்சியில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அங்கு பணியாற்றும் செயலாளா், தலைவா், உதவியாளா்கள் மற்றும் அவா்களது உறவினா்கள் பெயரில் கடந்த 4 ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பயிா்க்கடன், காப்பீடு, வறட்சி நிவாரணம், வைப்புத்தொகை, கோயில் மற்றும் புறம்போக்கு நிலம் ஆகியவற்றில் முறையான கையொப்பம் பெறாமலேயே நடைபெற்றுள்ள முறைகேடு தொடா்பாக, முன்னா் நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.