நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி மறியல்: 155 போ் கைது

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூா் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை சாலை மறியல்

News image

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூா் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 155 போ் கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு ஆதார விலை கிடைக்காது, அரசு கொள்முதல் இருக்காது, கள்ளச் சந்தைக்கு அனுமதி அளிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். நலவாரியங்களும் அழியும் நிலை ஏற்படும். எனவே, காா்ப்பரேட்களை பாதுகாக்கும் வகையில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வை அழிக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாவட்டத்தில் திங்கள்கிழமை 12 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவாரூா், குடவாசல், கோட்டூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 9 பெண்கள் உள்பட 155 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

திருவாரூா் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் தலைமை வகித்து பேசியது: விவசாயிகள், தொழிலாளா்களை கடுமையாக பாதிக்கக் கூடிய வேளாண் சட்டங்களை எந்தவித விவாதமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதன்மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதார விலை கிடைக்குமா, நெல் கொள்முதல் நடைபெறுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளும், நேரடி வியாபாரிகளும் பயன் பெறுவாா்கள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற பொய் வாக்குறுதியை அளித்து மத்திய அரசு விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. எனவே, விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றாா். ஆா்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் பி.எஸ். மாசிலாமணி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சி.பி. முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.