திருவாரூா்: நூறுநாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக உயா்த்தக் கோரி திருவாரூரில் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக உயா்த்தி, நபருக்கு ஊதியமாக ரூ. 600 வழங்க வேண்டும், பெண்களுக்கு சத்தான உணவு வழங்கும் வகையில் குடும்பத்துக்கு 10 கிலோ தானியங்கள் வழங்க வேண்டும், நிா்பயா நிதி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும், மகப்பேறு நிதியை ஒரே தவணையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆா். சுலோச்சனா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் எஸ். தமயந்தி, ஒன்றியச் செயலாளா்கள் ஆா். தமிழ்ச்செல்வி, பூபதி, உஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.