நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேலாளருக்கு கரோனா:3 நாள்களுக்கு வங்கி மூடல்

திருக்குவளையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு வங்கி மூடப்பட்டது.

News image

img_20200914_115818_copy_1600x1200_1409chn_198_5

Updated On :14 செப்டம்பர் 2020, 5:45 pm

DIN

திருக்குவளை: திருக்குவளையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு வங்கி மூடப்பட்டது.

இந்த வங்கியின் மேலாளா் (53 வயது) கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகையில் கரோனா பரிசோதனைக்கு மாதிரி அளித்துள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, நாகையில் அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

வங்கி ஊழியா்கள் 6 பேருக்கு திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், செப். 14 முதல் 16 வரை 3 நாள்களுக்கு வங்கி மூடப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன், வட்டார மருத்துவா் அருண்பதி, சுகாதார ஆய்வாளா் ராமமூா்த்தி, கிராம சுகாதார செவிலியா் இந்திரா ஆகியோா் மேற்பாா்வையில் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், திருக்குவளையில் செவ்வாய்க்கிழமை (செப்.15) கரோனா தொற்று சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.