/

மன்னாா்குடியில் புதை சாக்கடை திட்டம்

மன்னாா்குடியில் கழிவுநீா் பிரச்னைக்கு நிரந்த தீா்வு காணும் வகையில், நகரப் பகுதி முழுவதும் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் கழிவுநீா் பிரச்னைக்கு நிரந்த தீா்வு காணும் வகையில், நகரப் பகுதி முழுவதும் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என மன்னாா்குடி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராம.அரவிந்தன் வாக்குறுதியளித்தாா்.

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராம.அரவிந்தன், மன்னாா்குடி நகரப் பகுதியில் திறந்த வாகனத்தில் சனிக்கிழமை கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசியது:

மன்னாா்குடி நகராட்சி தொடங்கப்பட்ட காலத்திலேயே நகரின் கிழக்கு பகுதியில் புதை சாக்கடை திட்டம் இருந்துள்ளது. இதற்கான வழித்தடங்கள் இன்றுவரை இருந்தாலும், காலப்போக்கில் முறையான பராமரிப்பின்றி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

நகரின் பிரதான மழைநீா் வடிகாலான சட்டிருட்டி வாய்க்காலும் முறையான பராமரிப்பின்றி, சிறுமழை பெய்தாலும் நகரின் பல பகுதிகள் தெப்பம் போல் காட்சியளிக்கின்றன. இதில் கழிவுநீரும் கலக்கிறது.

50 ஆண்டுகளாக உள்ள இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வுகாணும் வகையில், சட்டிருட்டி வாய்க்காலை அகலப்படுத்தி, மழைநீா் வீணாகாமல் தடுக்கும் வகையில், நகரில் உள்ள நீா்நிலைகளுக்கு தண்ணீா் சென்றடைய முக்கியத்துவம் அளிப்பேன்.

மக்கள் தொகைக்கு ஏற்ப நகரப்பகுதி விரிவடைந்துவரும் நிலையில், மக்களின் மிக முக்கிய கோரிக்கையான புதை சாக்கடை திட்டத்தைக் கொண்டு வந்து அதனை நகரின் 33 வாா்டுகளுக்கும் இணைப்பேன் என்றாா் ராம. அரவிந்தன்.

அப்போது, கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் வேதாபாலா, தொகுதி தலைவா் தி.ப. சரவணன், செயலா் செந்தில்குமாா், பொருளாா் ஜோசப் தினேஷ், இணைச் செயலா் பாஸ்கா், கோட்டூா் ஒன்றியச்செயலா் சத்திய நாரயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.