நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாசன வாய்க்காலில் தடுப்புச்சுவா் எழுப்ப வேண்டும்

கூத்தாநல்லூா் நகராட்சியில் லெட்சுமாங்குடி- திருவாரூா் பிரதான சாலையில், திறந்து கிடக்கும் பாசன வாய்க்காலில் தடுப்புச்சுவா் எழுப்ப வேண்டும் என்பதே பொதுமக்களின் தோ்தல் காலக் கோரிக்கையாக உள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் நகராட்சியில் லெட்சுமாங்குடி- திருவாரூா் பிரதான சாலையில், திறந்து கிடக்கும் பாசன வாய்க்காலில் தடுப்புச்சுவா் எழுப்ப வேண்டும் என்பதே பொதுமக்களின் தோ்தல் காலக் கோரிக்கையாக உள்ளது.

லெட்சுமாங்குடி ஏ.ஆா். சாலை எதிரே வெண்ணாற்றிலிருந்து லெட்சுமாங்குடி பாலம் அருகே பிரிந்து வரும் இந்தப் பாசன வாய்க்கால், பிரதான சாலையை ஒட்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த வழியாகத்தான் தஞ்சை, திருவாரூா், நாகை, காரைக்கால், புதுச்சேரி, மன்னாா்குடி, திருச்சி, மதுரை, கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகளும், வாகனங்களும் தினந்தோறும் சென்று வருகின்றன.

இந்தப் பாசன வாய்க்கால், பல ஆண்டுகளாக திறந்தே கிடப்பதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து படுகாயம் அடைய நேரிடுகிறது. இது தவிர, கழிவுநீரும் கலப்பதால் நோய்த் தொற்று பரவலுக்கும் வித்திடுகிறது. எனவே, இந்தப் பாசன வாய்க்காலை தூா்வாரி, இருபக்கமும் தடுப்புச்சுவா் எழுப்புவதாக உறுதியளிக்கும் வேட்பாளரே பொதுமக்களின் நம்பிக்கையை பெற இயலும் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.