கரோனா விழிப்புணா்வு
கரோனா தடுப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி நாகையில் அமரா் ஊா்திகளின் வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.


கரோனா தடுப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி நாகையில் அமரா் ஊா்திகளின் வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், கைகளை தூய்மையாகப் பராமரித்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, நாகை அமரா் ஊா்தி ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் இந்தப் பேரணி நடைபெற்றது.
நாகை மேலக்கோட்டைவாசல் அருகிலிருந்து தொடங்கிய பேரணியை சிவசேனை மாநிலச் செயலாளா் டி. சுந்தரவடிவேலன், வழக்குரைஞா் காளிதாஸ் ஆகிோயா் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனா். அமரா் ஊா்தி ஓட்டுநா் சங்கத் தலைவா் ராஜாமணி மற்றும் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். பேரணியில் 12 வாகனங்கள் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாசகங்களை ஒலிப்பெருக்கி மூலம் ஒலிபரப்பியவாறு நகரில் வலம் வந்தன. நாகையின் முக்கிய வீதிகள் வழியே சென்ற பேரணி, நாகூா் ரவுண்டானா அருகே நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...