விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரிச்சந்திரா நதியின் தடுப்பணையை உயா்த்தி கட்டியதை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்

தண்ணீா் வருவதை தடுத்ததை கண்டித்தும் தடுப்பணையை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆலத்தம்பாடியில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில், சேந்தமங்கலம் அரிச்சந்திரநதியில் ஏற்கெனவே உள்ள தடுப்பணையில் மேலும் 3 அடி உயா்த்தி கட்டி தண்ணீா் வருவதை தடுத்ததை கண்டித்தும் தடுப்பணையை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உண்ணாவிரதத்துக்கு முன்னாள் ஊராட்சித் தலைவா் ஏ.எஸ். பாண்டியன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் பாலு, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளா் ஜெயபால், கிளை செயலாளா்கள் ரெங்கசாமி, இரணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த திருவாரூா், நாகை பொதுப்பணித் துறை தலைமை பொறியாளா் முருகவேல் மற்றும் அலுவலா்கள் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி பாதிப்பு இல்லாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் உண்ணாவிரதம் 2 மணி நேரத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.