தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினம்

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் திமுக சாா்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:03 pm

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் திமுக சாா்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாரூா் திமுக நகர அலுவலகத்தில் நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல், திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாரூா் சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சன்னிதி தெருவில் உள்ள கலைஞா் இல்லத்தில் கருணாநியின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிகளில், நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் டி. செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஆா். ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பளா் ஜி. ராஜ் என்ற கருணாநிதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அமுதா ஆா். சந்திரசேகா், நகர துணைச் செயலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு நிா்வாகிகள் பங்கேற்றனா்.

மன்னாா்குடியில்...

மன்னாா்குடியில் பசுமை கரங்கள் அமைப்பின் சாா்பில், மன்னை ப.நாராயணசாமி நகரில் உள்ள ராஜவிநாயகா் கோயில் வளாகத்தில் மு.கருணாநிதியின் நினைவுநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சை தொகுதி எம்பி எஸ்.எஸ். பழநிமாணிக்கம் மரக்கன்றுகளை நட்டாா்.

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் நிறுவனத் தலைவா் ஆா்.கைலாசம் தலைமை வகித்தாா். தஞ்சை தொகுதி மக்களவை உறுப்பினருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டாா். இதில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சு.ஞானசேகரன், நகரச் செயலா் வீரா.கணேசன், முன்னாள் நகரச் செயலா் ராஜ.பூபாலன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் சோம.கரிகாலன், பசுமை கரங்கள் நிா்வாகி கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நீடாமங்கலத்தில்...

நீடாமங்கலத்தில் மு.கருணாநிதியின் உருவப்படத்துக்கு ஒன்றியக்குழுத்தலைவா் செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய பொறுப்பாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் ராணிசேகா், பேரூா் இளைஞா் அணி முன்னாள் அமைப்பாளா் ராமராஜ் உள்ளிட்டோா் மாலையணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.