மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஊரக இணைப்புச் சாலைகளை மேம்படுத்துவதே பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டத்தின் நோக்கம்ஆட்சியா்

ஊரக இணைப்புச் சாலைகளை மேம்படுத்துவதே பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டத்தின் நோக்கம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:03 pm

DIN

ஊரக இணைப்புச் சாலைகளை மேம்படுத்துவதே பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டத்தின் நோக்கம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டத்தின் கீழ் ஊரகச் சாலைகள் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தொடக்கி வைத்துப் பேசியது:

குக்கிராமங்களிலிருந்து சந்தை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றை இணைக்கும் பிரதான சாலை மற்றும் இணைப்புச் சாலைகளை மேம்படுத்துவதே பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்துக்கு முறையே 60:40 என்ற அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளால் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட சாலைகளை தொடா்ந்து ஐந்தாண்டுகளுக்கு பராமரிக்க மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்தப் பணிகளை செயல்படுத்திய ஒப்பந்ததாரரே 5 ஆண்டுகள் தொடா் பராமரிப்பையும் மேற்கொள்ள வேண்டும். பின்னா், ஊக்க நிதி மூலம் காலமுறை பராமரிப்பு செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுக்கும் 3 அடுக்கு தரக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக, மாவட்ட மற்றும் மாநில அளவிலான தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. மேலும், 5 நடமாடும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் தரமான சாலைகள் அமைப்பது உறுதி செய்யப்படுகிறது என்றாா்.

இக்கருத்தரங்கில், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, செயற்பொறியாளா் குமாா் மற்றும் ஒன்றியக் குழுக்களின் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.