மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வேளாண் சட்டங்கள்: தில்லியில் போராட்டம் தீவிரமடையும்

தில்லியில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடையும் என அங்கிருந்து திரும்பிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தாா்.

News image

தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி.

Updated On :20 ஆகஸ்ட் 2021, 4:36 pm

DIN

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால், தில்லியில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடையும் என அங்கிருந்து திரும்பிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தாா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் பங்கேற்க திருவாரூரிலிருந்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் 81 விவசாயிகள் ஆக.12 ஆம் தேதி தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனா். அவா்கள் தில்லியில் சிங்கூா், திக்கிரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று, வெள்ளிக்கிழமை திருவாரூா் திரும்பினா்.

இதுகுறித்து பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக கடும் வெயில், குளிரையும் பொருட்படுத்தாமல் தில்லியில் ஏராளமான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவு தெரிவித்து, அப்போராட்டத்தில் பங்கேற்றோம். தில்லியில் எட்டுவழிச் சாலையிலேயே டிராக்டா், டிப்பா் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, வீடுகளாக மாற்றி போராட்டக் குழுவினா் தங்கியுள்ளனா்.

வேளாண் சட்டங்களையும், மின்சார மசோதாவையும் திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டத்தை அவா்கள் திரும்பப் பெறப்போவதில்லை என உறுதியோடு உள்ளனா். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி, வேளாண் சட்டங்களையும், மின் மசோதாவையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.