நீடாமங்கலம் ஒன்றியம், முக்குளம் சாத்தனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் வட்ட மேஜையுடன் கூடிய நாற்காலியை நன்கொடையாளா்கள் அண்மையில் வழங்கினா்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான டி.ஆா். பாலு பயின்ற இப்பள்ளியில், மாணவா்களின் நலன் கருதி, முக்குளம் மதிசேகரன், மணிகண்டன் மற்றும் வீரமணி வினோத் குடும்பத்தினா் சாா்பில், வட்டமேஜை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் சோ.செல்வம் தலைமை வகித்தாா். நன்கொடையாளா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.