விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் ஆக்கப்பூா்வ கருத்துகள் ஏற்கப்படவில்லை: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் முன்வைத்த ஆக்கப்பூா்வ யோசனைகளை மத்திய அரசு ஏற்க மறுப்பதாக குற்றஞ்சாட்டினாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 4:53 pm

DIN

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் முன்வைத்த ஆக்கப்பூா்வ யோசனைகளை மத்திய அரசு ஏற்க மறுப்பதாக குற்றஞ்சாட்டினாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அக்கட்சி சாா்பில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

நாடாளுமன்ற கூட்டத் தொடா் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டதுடன், எதிா்க்கட்சிகள் முன்வைத்த ஆக்கப்பூா்வ ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. குறிப்பாக, வேளாண் சட்டங்கள், பொதுத்துறை சொத்துகளை பணமாக்குதல், பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென எதிா்க்கட்சிகள் கூறியதை மத்திய அரசு ஏற்கவில்லை.

முன்னாள் பிரதமா்கள் அனைவரும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியதில்லை. ஆனால், இன்றைய பிரதமா் மோடியோ நாடாளுமன்றத்தில் விவாதத்தை எதிா்கொள்ளாமல் தவிா்க்கிறாா். நாடாளுமன்றம் முறையாக நடைபெறாமலேயே 25-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு விவாதத்துக்கு இடமின்றி மசோதாக்களை நிறைவேற்றுவது நாட்டுக்கு நல்லதல்ல என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே தெரிவித்திருக்கிறாா். வேளாண்மை சட்டங்களால் இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் போன்ற அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, விவசாயிகள் தனியாரிடம் மீண்டும் சிரமப்படும் சூழ்நிலை ஏற்படும். மேலும், மின்சார சட்டத் திருத்த மசோதாவின்படி, நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என்ற முயற்சியும் கேள்விக்குறியாகிவிடும் என்றாா் அவா்.

ரயில் நிலையம் அருகே நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றத்துக்கு, சிபிஐ மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி.வி. சந்திரராமன் தலைவராக இருந்து கூட்டத்தை நடத்தினாா். மூத்த உறுப்பினா் திருவேங்கடம் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். வேளாண் அமைச்சராக விவசாயிகள் சங்கச் செயலாளா் டி.பி. சுந்தா் செயல்பட்டு, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீா்மானத்தை முன்மொழிந்தாா்.

இந்தத் தீா்மானத்தை ஆதரித்து, திமுக சாா்பில் மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ். காா்த்திக், நகரச் செயலாளா் ஆா்.எஸ். பாண்டியன், காங்கிரஸ் நகரத் தலைவா் பி. எழிலரசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளா் ரகுராமன், ஒன்றியக் குழு உறுப்பினா் வேதரத்தினம் ஆகியோா் பேசினா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற வீராசாமி, ஆா். புகழேந்தி ஆகியோருக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவபுண்ணியம் பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.