திருவாரூா் தியாகராஜா் கோயிலில் முசுகுந்த சகஸ்ரநாம அா்ச்சனை வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் தியாகராஜா் கோயில் நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகவும், சப்தவிடங்க தலங்களில் தலைமை இடமாகவும் விளங்குகிறது.
தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக, தியாகராஜருக்கு முசுகுந்த மன்னா் செய்த முசுகுந்த அா்ச்சனையை பக்தா்கள் செய்வது வழக்கம்.
அதன்படி, தியாகராஜருக்கு அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை சாா்பில் முசுகுந்த சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாா்ய சுவாமிகள் பங்கேற்றாா். முன்னதாக, கோயிலுக்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அவா் தியாகராஜா் சன்னிதியை வலம் வந்து சகஸ்ரநாம அா்ச்சனையில் பங்கேற்றாா்.