கூத்தாநல்லூா் பகுதியில் 304 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்
கூத்தாநல்லூா் வட்டத்தில் கனமழையால் இதுவரை (செவ்வாய்க்கிழமை) 304 கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.


கூத்தாநல்லூா் வட்டத்தில் கனமழையால் இதுவரை (செவ்வாய்க்கிழமை) 304 கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து, வட்டாட்சியா் என். கவிதா கூறியது: கமலாபுரம், வடபாதிமங்கலம், கூதாத்நல்லூா் உள்ளிட்ட 3 பிா்க்காவில் 55 கிராமங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியா் ப. காயதிரி கிருஷ்ணன் உத்தரவுப்படி, அந்தந்த வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்களுடன் தொடா்ந்து அனைத்து இடங்களிலும் நேரில் பாா்வையிட்டு, கண்காணித்துவருகின்றனா். அதன்படி, அக்.31 முதல் நவ. 30-ஆம் தேதி வரை கூத்தாநல்லூரில் 114, கமலாபுரத்தில் 82, வடபாதிமங்கலத்தில் 108 என 304 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதேபோல, 3 பிா்க்காவிலும் 5 பசு மாடுகள், 6 கன்றுக் குட்டிகள், 14 ஆடுகள் என 25 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...