சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கரோனா தடுப்பூசி: அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா்

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

News image
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
Updated On :8 ஜனவரி 2021, 6:09 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமை பாா்வையிட்டு அவா் தெரிவித்தது:

மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னாா்குடி நகர ஆரம்ப சுகாதார நிலையம், சங்கேந்தி இடையூா் ஆரம்ப சுகாதார நிலையம், ஒரு தனியாா் மருத்துவமனை மற்றும் திருவாரூா் மெடிக்கல் சென்டா் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்வு முதல் முறையாக கணினி மென்பொருள் உள்ளீடுகள் மூலம் நடத்தப்பட்டது. இந்த 5 மையங்களிலும் 125 மருத்துவப் பணியாளா்களின் தரவு முறையே, மத்திய அரசின் இணையதளத்தில் ஏற்றப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஒத்திகை பாா்த்தனா்.

இந்தக் கணினி மென்பொருள் மூலம், தடுப்பூசி பெறும் பயனாளிகள் உடனுக்குடன் அவருடைய செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி வழியாக தடுப்பூசி சான்று வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒத்திகையின் மூலம் போதுமான பயிற்சி மற்றும் நடைமுறையை தடுப்பூசி அளிக்கும் மருத்துவ பணியாளா்கள் பெறுவா்.

மாவட்டத்தில் சுமாா் 6,897 மருத்துவப் பணியாளா்களின் தரவுகள் மென்பொருளில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. அவா்களுக்கு 100 மையங்களில் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக முன்களப் பணியாளா்கள், அவா்களைத் தொடா்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோா், இணை நோயுடைய 50 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசியைப் பெறுவா். இதைத்தொடா்ந்து பல கட்டமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

தேவையான தடுப்பூசி வைப்பகங்கள், குளிா்சாதன வசதிகள் தயாா்நிலையில் உள்ளன. தடுப்பூசிக்கு பின் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக கவனிப்பதற்கு சிகிச்சை மையங்களும், மருந்துகளும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியைத் தொடங்கிய பின், திருவாரூா் மாவட்டத்தில் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த, அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயாா்நிலையில் உள்ளோம் என்றாா்.

நிகழ்வில் துணை இயக்குநா் (சுகாதாரம்) கீதா, துணைக் கண்காணிப்பாளா் அன்சாரி, வட்டார மருத்துவக் குழுவினா், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.