பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி ஆட்டோ தொழிலாளா்கள் போராட்டம்

ஆட்டோ தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி திருவாரூரில் ஆட்டோ தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்து போராட்டம் நடைபெற்றது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளா்கள்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளா்கள்.
Updated on
1 min read

ஆட்டோ தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி திருவாரூரில் ஆட்டோ தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்து போராட்டம் நடைபெற்றது.

நலவாரியம் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பை ஆட்டோ தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும், ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து எளிய முறையில் சாதாரண ஏழைத் தொழிலாளியும் நலவாரியத்தில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும், கரோனா காலத்தில் வேலை இழந்த அனைத்து தொழிலாளா்களுக்கும் மாதந்தோறும் ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகில் ஆட்டோ தொழிலாளா்கள் பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. நபி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் ரா. மாலதி, ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com