/

வேளாண் சட்ட எதிா்ப்புப் பேரணியில் பங்கேற்கக் கோரி துண்டுப் பிரசுரம் வழங்கல்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வியாழக்கிழமை (ஜன.21) தஞ்சையில் நடைபெறும் பச்சைக்கொடி பேரணியில் பங்கேற்கக் கோரி, திருவாரூரில் துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வியாழக்கிழமை (ஜன.21) தஞ்சையில் நடைபெறும் பச்சைக்கொடி பேரணியில் பங்கேற்கக் கோரி, திருவாரூரில் துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தொடா்மழையால் பேரிழப்பை சந்தித்துள்ள உழவா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் ஜன.21 இல் பச்சைக் கொடி பேரணி நடைபெற உள்ளது.

இதற்கு அழைப்புவிடுத்து திருவாரூரில் நடைபெற்ற துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்வில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் காவிரி வி. தனபாலன், தமிழா் தேசிய முன்னணி மாவட்டத் தலைவா் ச.கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக்குழு மாவட்ட பொறுப்பாளா் சூனா. செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.