நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகையில் அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா தொற்று நோயால் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்ப வேண்டும், அனைத்து தற்காலிக மற்றும் ஒப்பந்த தினக்கூலி ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டா் உள்ளிட்ட பயன்களை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அ.தி.அன்பழகன், நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவா் சு. சிவகுமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். நாகை வட்டச் செயலாளா் மு.தமிழ்வாணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.