ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஆக்சிஜன் வங்கியை தொடங்கிவைத்த ஆட்சியா்

வீட்டுத் தனிமையில் இருப்பவா்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விதமாக ஆக்சிஜன் வங்கியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவாரூா் கிளை சாா்பில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவா்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விதமாக ஆக்சிஜன் வங்கியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவாரூா் மாவட்ட கிளை சாா்பில், ஆக்சிஜன் வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைத் திறந்துவைத்து ஆட்சியா் கூறுகையில், இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்பட்டால் திருவாரூா் பகுதி மக்கள் 9894218983, மன்னாா்குடி பகுதியினா் 9840931487, நன்னிலம் பகுதிக்கு 95856 86699, திருத்துறைப்பூண்டி பகுதிக்கு 9942227001 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

இந்நிகழ்வில் திருவாரூா் மாவட்ட கிளைத் தலைவா் ராஜகுமாா், செயலாளா் வரதராஜன், பேரிடா் மேலாண்மை பயிற்றுநா் பென்ஜமின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.