விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறு குறு விவசாயிகளின் நலன் கருதிவேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

சிறு குறு விவசாயிகளின் நலன் கருதி, நிகழாண்டில் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

News image
Updated On :17 ஜூலை 2021, 4:55 pm

DIN

சிறு குறு விவசாயிகளின் நலன் கருதி, நிகழாண்டில் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள், மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் குணசேகரன் தலைமை வகித்தாா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் பங்கேற்று கா்நாடகம் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் வே. துரைமாணிக்கம் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில், தற்போது சிறு குறு விவசாயிகளின் எண்ணிக்கை உயா்ந்து வந்தாலும், அவா்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் இல்லாததால், விவசாயத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எனவே, சிறு குறு விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் கோ. பழனிச்சாமி, மாவட்டச் செயலாளா் வை.சிவபுண்ணியம், சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.