மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் படித்த, வேலையில்லாத இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 4:57 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் படித்த, வேலையில்லாத இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் புதியதாக தொழில் தொடங்க, புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் என்ற மானியத்துடன் கூடிய திட்டத்தை, தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதில் உற்பத்தி மற்றும் சேவைத் தொழிலுக்கு, ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை திட்ட மதிப்பீடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்பயிற்சி தோ்ச்சி பெற்ற 21 முதல் 35 வயது வரையில் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு 45. விண்ணப்பதாரா் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25% அதிகபட்சம் ரூ. 50 லட்சம் மானியமாக வழங்கப்படும். பயன்பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூா் 610004, தொலைபேசி எண்: 04366-224402, 04366-290518 அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.